Home இலங்கை சாவகச்சேரி நகரசபையில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுகின்றோம்

சாவகச்சேரி நகரசபையில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுகின்றோம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்கள் தாம் தேர்தலில் போட்டியிலிருந்து விலகுவதாக ஊடகங்களில் வந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிவித்துள்ளனர்.

கட்சித்தலைவரோடு சந்திப்பு எனத் தெரிவித்தே தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும் இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் அறிவித்துள்ளனர்.  மேலும் தொடர்ந்தும் கட்சியின் வெற்றிக்காக போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த குறித்த 7 வேட்பாளர்களும் தாம் தேர்தலில் போட்டியிடாது விலகுவதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக நேற்றையதினம் தகவல் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More