Home இந்தியா வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

by admin


வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் தொழிற்சாலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் அதிகமானோர் தொழில் புரிந்து வருகின்ற நிலையில் எதிர்பாராத விதமாக தொழிற்சாலையின் இயந்திரத்தில் சிக்கி குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் வஉசி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், ராஜேந்திரன், அருண் ஆகிய 3 தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து குறித்த தொழிற்சாலைக்கு சென்ற காவல்துறையினர் உடல்களை மீட்டதுடன் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More