Home இலங்கை மக்களின் ஆணையை ஜனாதிபதி தவறாக பயன்படுத்தியுள்ளார் :

மக்களின் ஆணையை ஜனாதிபதி தவறாக பயன்படுத்தியுள்ளார் :

by admin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியமையானது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி  விக்கிரமரட்ன நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை ஜனாதிபதி தவறாக பயன்படுத்தி விட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை எனத் தெரிவிப்பவர்கள் அரசியலமைப்பினை முழுமையாக ஆராயவில்லை என்றே குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்த அவர் இவ்விடயத்தில் அரசியலமைப்பு அரசியல் தேவைக்கேற்ப மாற்றயமைக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பின் 42 ஆம் அத்தியாயம் இவ்விடயங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவினை பெறுபவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அமைச்சரவை செயற்படும் வரையில் பிரதமர் ஒருவர் பதவி வகிக்க முடியும் என பதவி நீக்கம் தொடர்பில் 46 (2) பிரிவு தெரிவிக்கின்றது .

பதவி காலத்தில் அவரே தன்விருப்பின் பெயரில் பதவி விலகலாம், அல்லது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டு வந்து அதனை நிறைவேற்றும் பட்சத்தில் பதவி விலக முடியும் என்றே 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரமோ, இடைப்பட்ட காலத்தில் அமைச்சரவையினை கலைக்கும் அதிகாரமோ ஜனாதிபதிக்கு கிடையாது. தற்போது இடம்பெற்ற விடயங்கள் இடம்பெற கூடாது என்பதற்காகவே பாராளுமன்றம் அதிக அதிகாரமுடையதாக மாற்றியமைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்திற்கான சட்டத்திரணிகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More