Home இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாயின் சடலம்

காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாயின் சடலம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தை சேர்ந்த 19 வயதான அபயரத்னா என்பவரின் சடலமே இவ்வாறு கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய வாசலுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டது.

அது தொடர்பில்; சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை காவல்துறையினர் குறித்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறிந்து உள்ளனர்,

தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More