Home இலங்கை உடனடியாக பாரளுமன்றை கூட்டாவிட்டால் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம்

உடனடியாக பாரளுமன்றை கூட்டாவிட்டால் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம்

by admin

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உடனடியாக பாரளுமன்றை கூட்டுமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்;துள்ளது.  மேலும் பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதமானால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர் நவுட்  (Heather Nauert ) இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதமாவதனால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More