Home இலங்கை ரணில் அரசாங்கத்திற்கு எதிராக MY3+MR அரசின் தொழிற்சங்கங்கள் ஒன்று திரள்கின்றன….

ரணில் அரசாங்கத்திற்கு எதிராக MY3+MR அரசின் தொழிற்சங்கங்கள் ஒன்று திரள்கின்றன….

by admin


மக்களின் தேவைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும், மகிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாகவும் தொழிற்சங்கங்களின் பலத்தினை நிரூபிக்கும் வகையிலும் எதிர்வரும் 12ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் ஒன்றுகூடவுள்ளதாக ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டைப் பாதுகாப்பதற்கான உழைக்கும் மக்களின் பலம் எனும் தொனிப்பொருளில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களாக அனைத்துத்துறை சார்ந்த தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கித் தமது தேவைகளுக்காகப் போராடி வருகின்றனர் எனவும் தேசிய அரசாங்கத்தில் தமது தேவைகள் எவையும் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது தமது பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது எனக் கூற முடியாவிட்டாலும் அவர் தமது தேவைகள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடினார் எனவும் அவர் தற்போது பிரதமராக்கப்பட்டுள்ளமையினை வரவேற்கின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More