Home இலங்கை மைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் :

மைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் :

by admin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் இடம்பெற்று வருகின்றது. இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு படையின் தலைமை அதிகாரி, முப்படைகளின் தளபதி மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதன் மூலம் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய நோக்கிலேயே இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆரியசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு கீழ் இயங்குகின்ற பாதுகாப்புச் சபையின் இச் சந்திப்பில் நாட்டில் அமைதியான நிலமையை பேணுவதற்கு முப்படைத் தளபதிகளுக்கும் மற்றும் காவல்துறை மா அதிபருக்கும் ஜனாதிபதியால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More