Home இந்தியா மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதிக்கின்றது

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதிக்கின்றது

by admin

 
மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை அதன் பாரம்பரியத்துக்கு ஏற்ப ‘பங்களா’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில சட்டப் பேரவையில் கடந்த ஜூலை 26-ம் திகதி ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நிறுவனங் களின் பெயர்களை பாஜக தனது விருப்பத்துக்கேற்ப பெரும்பாலும் தினமும் மாற்றிவருகிறது. ஆனால், மேற்குவங்கத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றம் செய்வ தற்கு சட்டசபை தீர்மானம் நிறை வேற்றியும் மத்திய அரசு தாமதித்து வருகிறது.

சட்டப்பேரவை தீர்மானத்துக்கும் மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More