Home இலங்கை யாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி…

யாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி…

by admin


யாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் காரினை ஒட்டி சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடனே விபத்து ஏற்பட்டு உள்ளது.

அரியாலை நெடுங்குளம் புகையிரத கடவையில் இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காரினை செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை பகுதியை சேர்ந்தவர் அப்பகுதியில் உள்ள வாகன திருத்தகத்திற்கு (கராஜ்க்கு) காரினை கொண்டு சென்று திருத்தி விட்டு திரும்பும் வழியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More