Home இலங்கை வவுனியா குருமன்காட்டில், ஆயுதங்களுடன் இளைஞர் கைது…

வவுனியா குருமன்காட்டில், ஆயுதங்களுடன் இளைஞர் கைது…

by admin

வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் முச்சக்கரவண்டியில் பல ஆயுதங்களுடன் சென்ற நபரை நேற்றிரவு வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் துரத்திச்சென்று கைது செய்துள்ளனர்.

வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டிருந்த போது முச்சக்கரவண்டி ஒன்று அதிவேகமாக பயணித்த நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் மறித்தும் முச்சக்கரவண்டியினை நிற்காமல் சென்றுள்ளது.

இதனையடுத்து முச்சக்கரவண்டியினை பின் தொடர்ந்து துரத்திச் சென்ற காதவல்துறையினர் வவுனியா நகரப்பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியினை மடக்கி பிடித்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்து பாரிய கத்தி, கோடரி, பைப் போன்றவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் முச்சகரவண்டியையும் மீட்கப்பட்ட ஆயுதங்களையும் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அத்துடன் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பல்வேறு பல்வேறு கோணத்தில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதுடன் கைது செய்யப்பட்டவர் வவுனியா தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய , இளைஞர் ஒருவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More