Home இலங்கை நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை பதவி விலக முடியாது

நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை பதவி விலக முடியாது

by admin

பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு மகிந்த ராஜபக்ஸவிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கடியையும் அவப்பெயரையும் ஏற்படுத்தாது பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனினும் எதிர்வரும் 7ஆம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை பதவி விலகும் எண்ணம் தனக்கில்லை என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More