Home இலங்கை 2ஆம் இணைப்பு – மஹிந்த + அமைச்சரவைக்கு எதிரான மனு ஒத்திவைக்கப்பட்டது..

2ஆம் இணைப்பு – மஹிந்த + அமைச்சரவைக்கு எதிரான மனு ஒத்திவைக்கப்பட்டது..

by admin

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த  மனுவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அந்த மனுவை தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சரேசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதமருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  இந்த  மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை – நீதிமன்றில் தெரிவிப்பு....

Nov 30, 2018 @ 10:52
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவுக்கு, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடையாதென, சபாநாயகரால் உறுதிசெய்யப்பட்டுள்ளதென, ஜனாதிபதி சட்டத்தரணி ஈ. கனகேஸ்வரனால், இன்று (3011.18), மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மஹிந்தவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், தொடர்ந்தும் அவர் அந்தப் பிரதமர் பதவியில் நீடிப்பது உகந்ததல்லவென, சட்டத்தரணி எடுத்துக் கூறினார்.

மஹிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கும் பிரதமர் பதவியை அவர் வகிப்பதற்கும், சட்ட ரீதியில் அதிகாரம் இல்லையெனத் தீர்ப்பளிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கைச்சாத்திட்டு தாக்கல் செய்த யாதுரிமைப் பேராணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று ஆராய்ந்த போதே, சட்டத்தரணி கனகேஸ்வரன், மேற்கண்டவாறு கூறினார்.

இதனால், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், மஹிந்த ராஜபக்ஷவால், பிரதமர் பதவி வகிப்பதற்கு சட்ட ரீதியான அதிகாரம் கிடையாதெனவும், சட்டத்தரணியால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More