Home சினிமா தொலைக்காட்சித் தொகுப்பாளரை கதாநாயகன் ஆக்கும் சிவகார்த்திகேயன்!

தொலைக்காட்சித் தொகுப்பாளரை கதாநாயகன் ஆக்கும் சிவகார்த்திகேயன்!

by admin


நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் கனா திரைப்படத்தை வெளியிடவுள்ளது. இந்த  நிலையில், அடுத்த படத்தில் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ரியோவை கதாநாயகனாக்குகிறார் சிவகார்த்திகேயன்.

ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ச்சியமாக பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரையில்  12 திரைப்படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களின் பட்டியலில் 5ஆவதாக இணைந்துள்ளார்.

திரைப்படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன் எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கனா என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். கனா படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோ நாயகனாக அறிமுகமாகின்றார். அவருக்கு நாயகியாக சிரின் கஞ்சவாலா நடிக்கின்றார்.

இவர்களுடன் ராதாரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் பலரும் நடிக்க யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்திற்கான ஆரம்பப் பூஜை நேற்று இடம்பெற்றது. விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் ரியோ துணை நடிகராக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More