Home இலங்கை வேலை நிறுத்தத்தை விட்டு கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

வேலை நிறுத்தத்தை விட்டு கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

by admin

அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை நிறைவு செய்து மீண்டும் கடமைக்கு திரும்ப வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி உடன்பாடு ஒன்று எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடமபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் எனவும் தேயிலை கைத்தொழிற்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி இச் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான், மஹிந்தாநந்த அளுத்கமகே உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More