Home இலங்கை இடப்பெயர்விற்கு முன்னரான நிலையை ஏற்படுத்தித் தருவோம்

இடப்பெயர்விற்கு முன்னரான நிலையை ஏற்படுத்தித் தருவோம்

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
1990 ஆம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னர் இந்த மண்ணில் எவ்வாறு இருந்தீர்களோ அந்நிலையை ஏற்படுத்தித் தருவோம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு பிரதேசத்தின் மயிலிட்டி வடக்கு பலநோக்கு மண்டபமாக அமைக்கப்பட்டிருக்கும் கிராமியச் செயலக திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வீடுகள் இருந்த அடையாளமே தெரியாதவாறு முற்றிலும் அழிவடைந்த நிலையிலேயே மயிலிட்டி பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இக்கிராமத்தை புதிதாகவே உருவாக்க வேண்டிய தேவையுள்ளது.
இடப்பெயர்விற்கு முன்னதாக நீங்கள் எவ்வாறு இருந்தீர்களோ அந்நிலைக்கு உங்களை கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதம விருந்தினர் உரையில் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
நோர்வே அரசின் அனுசரணையுடன் யு.என்.டி.பி. நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் பலநோக்கு மண்டபத் திறப்புவிழாவும் மண்டப கையளிப்பு நிகழ்வும் இன்று வியாழன் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.
பிரதம விருந்தினராக வருகைதந்து பலநோக்கு மண்டபத்திற்கான பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் மயிலிட்டி வடக்கு J/251 கிராமிய அபிவிருத்தி அமைப்பிடம் உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் கையளித்தார்.
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More