Home இலங்கை யாழுக்கு கடத்தப்படவிருந்த 71 பாலை தீரந்திகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

யாழுக்கு கடத்தப்படவிருந்த 71 பாலை தீரந்திகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறைப் பிரிவுக்குட்ப்பட்ட 9 ம் கட்டை வனப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த தயாரான நிலையில் மரம் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனத்தையும் 71 தீராந்திகளையும் கைப்பற்றிய ஒட்டுசுட்டான் காவல்துறையினர் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.

இதனையடுத்து அவரை எதிர்வரும் 9 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றில் முற்ப்படுத்தவும் நீதிமன்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட 9 ம் கட்டை வனப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தொடர்ச்சியாக மரம் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் இதனை தடுத்து நிறுத்தும் முகமாக ஒட்டுசுட்டான் காவல்;நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற காவல்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் தங்கியிருந்து வாகனத்தில் மரம் ஏற்றப்பட்ட நிலையில் டிப்பர் வாகனத்தையும் 71 தீராந்திகளையும் நபர் ஒருவரையும் கைது செய்திருந்தனர்.

அதனைவிட குறித்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன. இந்தவிடயம் தொடர்பில் மேலும் பலரை கைது செய்ய வேண்டி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More