Home இலங்கை காலியில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்…

காலியில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்…

by admin

காலியில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வெலிகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வெலிகம பகுதியில் இருந்து தமது உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயம் மக்குலுவ ​ஜூம்மா பள்ளிவாசல் நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடல​ம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More