Home இலங்கை ராஜபக்ஸக்களின் டுபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்

ராஜபக்ஸக்களின் டுபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்

by admin

ராஜபக்ஸக்கள் டுபாய் வங்கிகளில் வைத்துள்ள கணக்குகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான காரணங்களையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த பல நாட்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அதிகாரிகள் அங்கு பல தகவல்களை திரட்டியுள்ளதாகவும் அது தொடர்பான தகவல்கள் சில நாட்களில வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாமலுக்கு கனவிலும் தனது டுபாய் வங்கிக் கணக்குகள் குறித்து தோன்றுவதனால் பயம் ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More