Home இலங்கை 2ஆம் இணைப்பு – பட்டம் ஏற்ற சென்ற சிறுவனின் உயிரும் பறந்துபோனது…

2ஆம் இணைப்பு – பட்டம் ஏற்ற சென்ற சிறுவனின் உயிரும் பறந்துபோனது…

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பட்டம் ஏற்ற சென்ற சிறுவன் வயல் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார். இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்று உள்ளது. ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் மகா வித்தியாலயத்தில் , தரம் 06 இல் கல்வி கற்கும் ஆவரங்கால் கிழக்கை சேர்ந்த சதிஸ்குமார் லிஷாந் (வயது 11) எனும் மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,

சிறுவனின் தாயார் வீட்டிற்கு அருகில் மரண சடங்குக்கு சென்று இருந்த சமயம் , தகப்பனார் கடைக்கு சென்று இருந்தார். அச் சமயம் சிறுவன் வீட்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு அருகில் உள்ள வயல் தரவைக்கு பட்டம் ஏற்ற சென்றுள்ளார். வீடு திரும்பிய பெற்றோர் சிறுவனை காணாது உறவினர்களுடன் இணைந்து தேடிய போது , வீட்டிற்கு அருகில் உள்ள வயல் தரவை கிணற்றின் அருகில் பட்டமும் பட்டம் ஏற்றிய நூலினையும் கண்டுள்ளனர்.

அதனை அடுத்து கிணற்றினுள் பார்வையிட்ட போது , சிறுவன் கிணற்றினுள் சடலமாக காணப்பட்டு உள்ளார். அதனை அடுத்து அச்சுவேலி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடல் கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More