Home இந்தியா இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதனை அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவம்

இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதனை அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதனை அனுமதிக்கக் கூடாது என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் ( Bipin rawat)  இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகள் சீனாவிற்கு சார்பாக செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்டை நாடுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டுமென அவர் மறைமுகமாக கோரியுள்ளார். இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு தந்திரோபாயங்களுடன் தொடர்புடைய அண்டை நாடுகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பங்களாதேஸ், பூட்டான், மியன்மார், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுவது இந்தியாவை பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More