Home இலங்கை யுத்தத்தின் பின்னர் ராஜபக்ஸ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானது – ராஜித சேனாரட்ன

யுத்தத்தின் பின்னர் ராஜபக்ஸ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானது – ராஜித சேனாரட்ன

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யுத்தத்தின் பின்னர் ராஜபக்ஸ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஸக்களுடன் தமக்கு தனிப்பட்ட ரீதியிலான எவ்வித விரோதமும் கிடையாது எனவும், அரசியல் ரீதியான முரண்பாடே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச தனது வகுப்புத் தோழர் எனவும், மஹிந்த ராஜபக்ஸக்களுடன் 40 ஆண்டு பழக்கம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றியின் பின்னர் அரசாங்கம் இனவாத, மதவாத அடிப்படையில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More