Home இலங்கை யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சையை தொடர்வது உகந்ததல்ல

யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சையை தொடர்வது உகந்ததல்ல

by admin

யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது தொடர்ந்தும் கிருமித்தொற்றுக்குள்ளாகுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் யாழில் உள்ள பரபல தனியார் வைத்தியசாலையியில் மேற்கொள்ளப்பட்ட கண்சத்திரசிகிச்சையின் போது கிருமித் தொற்றுக்குள்ளாகி பலர் பாதிப்படைந்திருந்ததுடன் சிலருக்கு கண்விழிக்கோளத்தினை அகற்ற வேண்டியும் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் தமது தணைக்களத்தினால் குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பில் அவர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற வகையிலான தனியார் வைத்தியசாலைகளை கட்டுப்படுத்துகின்ற சட்டங்கள் பலமில்லாத நிலையில் இருந்ததினால் சில ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் மட்டும் தமது திணைக்களத்தினால வழங்க முடிந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணத்துவக் குழுவினரே குறித்த தனியார் வைத்தியசாலையில் விசாரணைகளை மேற்கொண்டு விசாரணை தொடர்பான விளக்கங்களையும் சிபாரிசுகளையும் அறிக்கையாக தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்;ள குறைபாடுகள் சீர் செய்யப்படும் வரையில் குறித்த வைத்தியசாலையினுடைய சத்திரசிகிச்சை கூடத்தில் சத்திர சிகிச்சைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுக்குள்ளதற்கான சந்தர்ப்பம் உள்ளது என தெரிவித்துள்ளனர் எனவும ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More