Home இலங்கை தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் நிராகரிப்பு – 41 ஆயிரம் வாக்காளரின் கதி என்ன?

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் நிராகரிப்பு – 41 ஆயிரம் வாக்காளரின் கதி என்ன?

by admin


41 ஆயிரம் தபால் மூல  வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்காக அளிக்கப்பட்ட சுமார் 41 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் திணைக்­கள சேவை­யா­ளர்­களின் விடு­முறைகள் இரத்து.!

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முன்­னிட்டு அஞ்சல் திணைக்­கள சேவை­யா­ளர்­களின் விடு­முறைகள் நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை முதல் எதிர்­வரும் பெப்­ர­வரி 10 ஆம் திகதி வரை இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அஞ்சல் மா அதி­பதி டீ.எல்.பி.ஆர். அப­ய­ரத்ன அறி­வித்­துள்ளார். உள்­ளூ­ரா­ட்சி மன்றத் தேர்­த­லுக்­காக அஞ்சல் திணைக்­க­ளத்­துக்கு பாரிய பொறுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தேர்­தலை உரிய முறையில் சட்ட ரீதி­யாக நடத்­து­வ­தற்­காக அஞ்சல் திணைக்­களம் பாரிய கட­மையை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அதன்­படி தேர்தல் நடத்­துதல், வாக்­கு­களை எண்­ணுதல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சேவை­யா­ளர்­களை நிய­மிக்கும் கடி­தங்­களை தாம­த­மின்றி ஒப்­ப­டைத்தல் மற்றும் வாக்­காளர்  அட்­டைகளை வீடு வீடாகச் சென்று ஒப்­ப­டைத்தல் போன்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. மேற்­படி விட­யங்­களைக்  கவ­னத்தில் கொண்டு அஞ்சல் திணைக்­கள சேவை­யா­ளர்கள் விடுமுறை பெறாமல் இருக்குமாறு அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More