Home உலகம் இஸ்ரேல் பிரதமருடன் செல்பி எடுக்க முண்டியடித்த பொலிவுட் பிரபலங்கள்…

இஸ்ரேல் பிரதமருடன் செல்பி எடுக்க முண்டியடித்த பொலிவுட் பிரபலங்கள்…

by admin

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று மும்பை நகரை அடைந்தார்.  மும்பை நகரில் தாஜ் பலஸ் சொகுசு விடுதிக்கு சென்ற அவர், அங்கு தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகாராஷ்டிர முதல் அமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் சென்ருறிருந்தார்.

பின்னர், அருகாமையில் உள்ள நாரிமன் ஹவுஸ் வளாகத்துக்கு சென்ற பெஞ்சமின் நேதன்யாகு அங்கு தீவிரவாத தாக்குதலில் பலியான இஸ்ரேல் தம்பதியர் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, மாலையில் பொலிவுட் பிரபலங்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துரையாடினார்.

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரன் ஜோஹர், சுபாஷ் காய், இம்தியாஸ் அலி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அவரை சந்தித்து பேசினர். பின்னர் அனைவரும் உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்டனர். பாலிவுட் படங்களை இஸ்ரேல் மற்றும் தான் அதிகம் விரும்புவதாக அவர் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More