Home இலங்கை போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி கைது..

போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி கைது..

by admin

அநுராதபுரம்-வாரியபொல பிரதான வீதியின் மினுவாங்கொடை பிரதேசத்தில் போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பதில் நீதிவான் நீதிபதி ஜயபிரேம பீ. தென்னக்கோன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி செலுத்திய வாகனம் நேற்றையதினம் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 35 வயதான பெண்ணும், அவரது 12 வயதான மகளும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More