Home இலங்கை 2ஆம் இணைப்பு – பொன்னாலை – பருத்திதுறை வீதியில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்…

2ஆம் இணைப்பு – பொன்னாலை – பருத்திதுறை வீதியில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

இராணுவ கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த பொன்னாலை – பருத்திதுறை வீதி விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சேவைகளும் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990 ஆம் அண்டு யூன் மாதம் முதல் குறித்த வீதி இரானுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. குறித்த வீதி படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் பல கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த வீதியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றையதினம் குறித்த வீதியை பொது மக்களின் பாவனைக்காக படையினரிடம் இருந்து விடுவிப்பதாக யாழ் வந்த ஐனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு மயிலிட்டியில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகன் யாழ் இராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி விடுவிக்கப்படுகின்றது

Jan 28, 2018 @ 05:43


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று முற்றாக விடுவிக்கப்படவுள்ளது. இவ்வீதி மயிலிட்டித்துறைமுகத்தினை அண்டிய பகுதியில் இதுவரை காலமும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 3 கிலோ மீற்றர் வரையான பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் இராணுவத்தினரின் போக்குவரத்து மட்டுமே இடம்பெற்று வந்தது.

இதனால் பருத்தித்துறையில் வசிக்கும் மயிலிட்டி மீனவர்கள் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட மயிலிட்டித்துறைமுகத்தின் பயனை முழுமையாக பெறமுடியாது பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த வீதியானது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் மக்கள் மேலதிகமாக 50 கிலோமீற்றர் தூரத்தையும், சொந்த வாகனங்களில் பயணிப்போர், 20 கிலோமீற்றர் தூரத்தையும் கடந்தே தமது தேவைகளை பூர்த்தி செய்தனர்.

இவ் வீதி கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் சுதந்திரதினம் அன்று முற்றாக திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில் மீள்குடியேறிய மக்கள் மட்டுமல்லாது மயிலிட்டி மீனவர்களும் குறுகிய நேரத்தில் வந்து தமது இடங்களை சீரமைத்து குடியமர்வதற்கன ஏற்பாடுகளில் ஈடுபட முடியும்.

இதேவேளை விடுவிக்கப்படும் பருத்தித்துறை- பொன்னாலை வீதி பக்கமாக உள்ள மயிலிட்டி துறைமுகம் அண்டிய ஒரு தொகுதி மக்களின் காணிகளும் விடுவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதுடன் மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள இராணுவ விடுதியாக காணப்படும் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More