Home இலங்கை மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர் கைது

மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சஞ்சரித்த நபர் ஒருவரை காவல்தறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

கல்கிஸ்ஸ பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின்போதே குறித்த சந்தேகத்துக்குரியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் ஐந்து இறப்பர் முத்திரைகளும், 5 கிராம் ஹெரோயினும் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More