Home இலங்கை வில்பத்து சட்டவிரோத காடழிப்பு – ரிஷாத் , பசிலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

வில்பத்து சட்டவிரோத காடழிப்பு – ரிஷாத் , பசிலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

by admin


வில்பத்து விலத்திக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு மேற்கொண்டு கட்டடங்கள் அமைக்கப்பட்ட காணிகளை மீளவும் அரசாங்கம் கையப்பத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இரண்டு பேரால் இந்த மனு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தினுள் சட்ட விரோதமான முறையில் காடுகளை அழித்து கட்டடங்களை அமைத்தமை மூலம் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

குறித்த மதுவை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கை விசாரிப்பதற்கு அனுமதித்துள்ளதுடன், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனப் பாதுகாப்பு திணைக்களம், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினரை எதிர்வரும் மார்ச் மாதம் 05ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More