Home உலகம் தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இருவர் பலி – 200 பேர் காயம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இருவர் பலி – 200 பேர் காயம்

by admin


தாய்வானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் ; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானின் கிழக்குக் கரைக்கு அப்பால் 20கிமீ தூரத்தில் 6.4ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹொவாலியன் என்ற நகரில், சேதமடைந்த விடுதிகளிலிருந்தும், குடியிருப்பு கட்டடங்களிலிருந்தும் 150 பேரை மீட்புப்பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

பல கட்டிடங்கள் சேசதமடைந்த நிலையில் மருத்துவமனை ஒன்றும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்தநிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நகரில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளதுடன் அவசர உதவிகளுக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட ஹொவாலியன் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும் தாய்வானில் கடந்த 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More