Home இலங்கை யாழில் சுமூகமான வாக்களிப்பு

யாழில் சுமூகமான வாக்களிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 1 மாநகர சபை , 3 நகர சபை, மற்றும் 13 பிரதேச சபை அடங்கலாக 17 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 68 ஆயிரத்து 476 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்காளர்கள் வாக்களிக்கப்பதற்கு எதுவாக 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்கள் மற்றும் தற்காலிக இடங்களில் வசிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கு இலவச போக்குவரத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளை அளிக்க முடியும்.

இம்முறை வாக்கெண்ணும் பணிகள் அந்த அந்த வட்டாரங்களிலையே நடைபெற்றது அந்த வகையில், யாழ்,மாவட்டத்தில் 243 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்கெண்ணும் பணிகள் மாலை 5 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இம்முறை தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதனை அவதானிக்க முடிகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More