Home உலகம் ஜாவா தீவில் நிலச்சரிவில் சிக்க 5 பேர் பலி…

ஜாவா தீவில் நிலச்சரிவில் சிக்க 5 பேர் பலி…

by admin

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்றையதினம் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்க 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15-க்கும் மேற்பட்டோரை காண வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜாவா தீவு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றதன்காரணமாக அங்குள்ள பிரிபெஸ் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் 5 பேரே மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் 15 பேரை காணவில்லை எனவும் அவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More