Home இலங்கை சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஆதரவு…

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஆதரவு…

by admin

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை அவர்களின் தகுதிகளுக்கேற்ப கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு சேர்க்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் எடுக்கப்படவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எடுக்கப்படவேண்டிய வேண்டிய கட்டங்களைத் தாண்டி வந்து இறுதித் தருணத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த கொள்கை ரீதியிலான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்க தரப்பு வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More