Home உலகம் கட்டார் உலகக் கிண்ண மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் பரிதாபமாக பலி

கட்டார் உலகக் கிண்ண மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் பரிதாபமாக பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கட்டார் உலகக் கிண்ண மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . 2022ம் ஆண்டில் கட்டாரில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தக் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் காலீபா மைதான நிர்மானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் ஆபத்தான கருவியொன்றை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, 130 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

40 வயதான ஷசாரி கொஸ் ( Zachary Cox என்ற பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மூளை, கழுத்து ஆகியனவற்றுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்ட காரணத்தினால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மைதானங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடையாது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More