Home இந்தியா நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக ஏலம் விடப்படுகின்றது

நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக ஏலம் விடப்படுகின்றது

by admin


கடந்த சனிக்கிழமை துபாய் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி ஓவியம் வரைவதிலும் அதிகமாக ஆர்வம் காட்டினாராம். அவர் வரைந்த ஓவியம் துபாயில் நடக்கவிருக்கும் ஏலத்தில் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காகத்தான் ஸ்ரீதேவி தான் வரைந்த ஒரு ஓவியத்தை கொடுத்துள்ளார் எனவும் அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

10 லட்ச ரூபாய்க்கும் மேல் அந்த ஓவியம் விலைபோகலாம் என கூறப்படுகிறது. ஸ்ரீதேவி சிறந்த நடிகை மட்டுமின்றி நன்றாக ஓவியம் வரைவார் எனவும் அவரது ஏலத்திற்கு வரும் ஓவியம் நடிகை சோனம் கபூரின் முதல் படமான ‘சாவரியா’ படத்தைப் பார்த்து வரைந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வரைந்த பல ஓவியங்களைச் சேமித்து வைத்துள்ளார் எனவும் நடிப்புக்கு அடுத்தபடியாக, அவர் விருப்பமாகச் செய்யும் வேலை ஓவியம் வரைவது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி தினமும் மாலை வேளைகளில் 4 முதல் 5 மணிநேரம் பெயின்டிங் செய்வாராம். வீட்டில் தனது மகள்களைப் பார்த்துக்கொண்டே இதிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More