Home இந்தியா கார்த்திக் சிதம்பரத்தை 5 நாட்கள் சிபிஐ தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

கார்த்திக் சிதம்பரத்தை 5 நாட்கள் சிபிஐ தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

by admin


முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் விசாரணைக்காவலில் விசாரித்த இந்திய உளவுத்துறை இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியது.  அத்துடன் மேலும் 5  நாட்கள் காவலில் தடுத்து வைத்து அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார்

இதற்காக கார்த்தி சிதம்பரம் தனது அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. மேலும், ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி,வெளிநாட்டில் இருந்து முதலீட்டைப் பெற, கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.3 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார்.

இன்றைய தினம் உளவுத்துறை நீதி மன்றத்தில்  பிஐ நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.  அப்போது, போதிய கால அவகாசம் இல்லாததால் கார்த்தி சிதம்பரத்திடம் சரியாக விசாரணை நடத்த முடியவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன்  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரத்தின் ஏஎஸ்சிபி நிறுவனம் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கார்த்தி சிதம்பரத்துக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதற்காக, ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்துக்கு பணம் அனுப்பப்பட்டதற்கான இன்வாய்ஸ் உள்ளிட்டவற்றையும் சிபிஐ கைப்பற்றியுள்ளது. இதுதொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டியிருப்பதாக சிபிஐ தெரிவித்தது.

 இதேவேளை சிபிஐயின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கார்த்திக்கின் வழக்கறிஞர் வாதிட்டார். அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு அவர் மீது போடப்பட்டுள்ளதாக கூறி அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று  கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரம் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும் மேலும், 14 நாட்கள் கால அவகாசம் வழக்க நீதிபதியிடம் சி.பி.ஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொசிலிட்டர் தஷார் மேஹ்தா முறையிட்டார். இந்த வழக்குடன் தொடர்புடைய இந்திராணி முகர்ஜி, கார்த்தி சிதம்பரத்தை ஒன்றாக வைத்து விசாரிக்க வேண்டியதுள்ளதாகவும் சி.பி.ஐ வழக்கறிஞர் தஷார் மேஹ்தா கூறினார்.
அத்துடன் சில முக்கிய ஆவணங்களையும் அவர் நீதிபதியிடம் காட்டினார். இதில், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த வழக்கு விநோதமானது என்றும் உடல்நலம் நன்றாக இருந்தும் கார்த்தி சிதம்பரத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடிய, விடிய பொதுவார்டில் காக்க வைத்ததாக அவரது வழக்கறிஞர் புகாரளித்தார்.
எல்லா சம்மனுக்கும் தவறாமல் கார்த்தி சிதம்பரம் ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில், சிபிஐ எப்படி அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறலாம் எனவும் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுனில் ராணா, கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More