Home இலங்கை ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இன்று இலங்கை வருகின்றார்

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இன்று இலங்கை வருகின்றார்

by admin

ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் இன்றையதினம் இலங்கைக்கு வரவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாக இன்று வரும் அவர் இலங்கையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். நாளை கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெறும் முகமாலைக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இலங்கைக்கு பயணம்…

Mar 3, 2018 @ 04:16

கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பினை ஏற்று இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை இவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளை சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேவேளை எதிர்வரும் 6ஆம் திகதி, கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முகமாலைக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More