Home உலகம் சிரியாவில், துருக்கி நடத்திய வான் தாக்குதலில் 36 பேர் பலி

சிரியாவில், துருக்கி நடத்திய வான் தாக்குதலில் 36 பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரியாவில், துருக்கி நடத்திய வான் தாக்குதல்களில் 36 அரச ஆதரவு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் அப்ரீன் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட சிரியாவின் கப்ரா ஜின்னா பகுதி முகாம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குர்திஸ் படையினருக்கு ஆதரவளிக்கும் வகையில் சிரிய அரச ஆதரவு படையினர் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அப்ரீன் நகரிற்குள் பிரவேசித்திருந்தனர். துருக்கிப் படையினரின் இந்த தாக்குதல்களுக்கு சிரியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More