Home இலங்கை சாரதியைத் தாக்கிய தென் மாகாணசபை உறுப்பினரும் மனைவியும் கைது – கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் 5 குண்டுகள் :

சாரதியைத் தாக்கிய தென் மாகாணசபை உறுப்பினரும் மனைவியும் கைது – கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் 5 குண்டுகள் :

by admin

தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். தலங்கம பிரதேசத்தில் தனியார் பேருந்துச் சாரதியை தாக்கியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமது சொகுசு வாகனத்தில் பயணித்த வேளை தனியார் பேருந்து சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணத்தினாலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது தென் மாகாணசபை உறுப்பினரும் அவரது மனைவியும் இணைந்து கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பேருந்து சாரதியை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை ஒருவர் , தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்துள்ள காவற்துறையினர், அவர்களின் துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர். இந்த துப்பாக்கியில் ஐந்து குண்டுகள் இருந்துள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More