Home இலங்கை 3ஆம் இணைப்பு – உணவு ஒவ்வாமை – கர்ப்பிணி பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி:-

3ஆம் இணைப்பு – உணவு ஒவ்வாமை – கர்ப்பிணி பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி:-

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊர்காவற்துறை தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்,  ஊர்காவற்றுறை வைத்தியசாலை வைத்தியர் ஜே.ஜீவகன் தெரிவிக்கும் போது,

இவ் உணவு ஒவ்வாமையினால் இதுவரை 109 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  அவர்களில் 77 பேர் சகிச்சை பெற்று குணமடைந்து வீடு சென்றுள்ளனர். ஏனைய 32 பேர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஒர் கர்ப்பிணி தாயாரது மேலதிக நலனை கருத்தில்கொண்டு அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளோம். இதனை விட 50 நோயாளர்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.இந்நிலையில் இவ் உணவு ஒவ்வாமையினால் ஏற்பட்ட இக் கோளாறு கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவரப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

2ஆம் இணைப்பு – யாழில் தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் 109 பேர் பாதிப்பு…

யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழங்கப்பட்ட பிரசாதம் ஒவ்வாமையினால் 109 பேர் பாதிப்படைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

ஊர்காவற்துறை நெருஞ்சி முனை பகுதியில் உள்ள தேவாலயத்தில் இன்று காலை தவக்கால சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பூஜை வழிபாடுகளின் பின்னர் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உட்கொண்ட 109 பேர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சை பெற்ற பெரும்பாலனவர்கள் சுகமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More