Home இலங்கை வடமாகாண சபை அமர்வு நாளில் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தினால் போராடுவேன் – சிவாஜி.

வடமாகாண சபை அமர்வு நாளில் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தினால் போராடுவேன் – சிவாஜி.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண சபை அமர்வு நாட்களில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண சபை அமர்வு இன்று நடைபெறும் என தெரிந்தும் கரவெட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுகின்றது.

மாகாண சபை உறுப்பினர்கள் அமர்வுக்கு வருவதா , ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு செல்வதா ? மாகாணத்திற்கு தெரியாமல் மத்திய அரசாங்கம் தமது திட்டங்களை நடைமுறை படுத்தும் நோக்குடனையே மாகாண சபை அமர்வு நடைபெறும் நாளில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை ஒழுங்கு செய்கின்றார்கள் என நினைக்கிறன்.

இனிவரும் காலங்களில் மாகாண சபை அமர்வு நடைபெறும் நாளில் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக போராடுவோம் என தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More