Home இலங்கை யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது..

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது..

by admin

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார்.

புனித பத்திரிசியார் கல்லூரியில் பயின்ற புலம்பெயர் தமிழர்களின் நிதி உதவியில் கட்டப்பட்டுள்ள இந்த இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள் இடம்பெற்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பேராயர் கதிரினால், மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி மற்றும் பங்குத் தந்தையர்கள், அரச அதிகாரிகள், கன்னியாஸ்திரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More