Home இந்தியா தமிழகத்தின் தூத்துக்குடி சிப்காட் உருக்கு   ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு….

தமிழகத்தின் தூத்துக்குடி சிப்காட் உருக்கு   ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு….

by admin

தமிழகத்தின் தூத்துக்குடி சிப்காட்டில் இயங்கி வரும், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு   ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் முழு கடையடைப்புப் போராட்டம் தூத்துக்குடியில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது.

பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதல் சிறிய காய்கறி கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தன மேலும், மாலை 6 மணிக்கு தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், மில்லர்புரத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையம் வரை, 4 கி.மீ. தூரத்துக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முழுமையாக நிறைந்திருந்தனர். பல்வேறு குழுக்களாக கோஷம் எழுப்பியபடி நின்றிருந்தனர். பெருமளவில் பொதுமக்கள் திரண்டதால், மாலை 6 மணிக்குப் பிறகும் இச்சாலையில் கடைகள் திறக்கப்படவில்லை. காவற்துறையினர்  குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரவு 8 மணிக்குப் பிறகு படிப்படியாக மக்கள்  கூட்டம் குறையத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More