Home இலங்கை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமரை தோற்கடிக்க வர்த்தகர்களிடம் பணம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமரை தோற்கடிக்க வர்த்தகர்களிடம் பணம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமரை தோற்கடிக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தொடர்புகளை கொண்டு பெரிய வர்த்தகர்களிடம் பணத்தை கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

கெசினோ, நிர்மாணத்துறை, ஊடகத்துறை சார்ந்த மிகப் பெரிய வர்த்தகங்களை மேற்கொண்டுள்ள நபர்களிடம் இவ்வாறு பணம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு மில்லியன்ரூபா முதல் மூன்று மில்லியன் ரூபாவரை பணத்தை இவர்கள் கேட்டுள்ளதாகவும் எனினும் பணத்தை கொடுக்க வர்த்தகர்கள் மறுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

பிரதமரை தோற்கடிக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் பணம் கேட்டதாக குறித்த வர்த்தகர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  ஊடகங்களை சொந்தமாக கொண்டுள்ள சில வர்த்தகர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சி ஏற்கனவே குற்றம் சுமத்தி வருகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More