Home சினிமா பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு மறு உருவாக்கத்தில் நாயகனாக சசிகுமார்

பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு மறு உருவாக்கத்தில் நாயகனாக சசிகுமார்

by admin

இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இயக்கி நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற `தூறல் நின்னு போச்சு’ திரைப்படத்தின் மறு உருவாக்கில் நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளார்.  `தூறல் நின்னு போச்சு’ 1982ஆம் ஆண்டு வெளியாகிய படம். இந்தப் படத்தை பாக்யராஜ் இயக்கி நடித்தார். அவருக்கு நாயகியாக சுலோக்சனாவும், முக்கிய கதாபாத்திரத்தில் எம்.என்.நம்பியாரும் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் மறுஉருவாக்கத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமாரும், நம்பியார் கதாபாத்திரத்தில் ராஜ்கிரனும் நடிக்கவுள்ளனர்.

தூறல் நின்னுப் போச்சு படத்தை உரு திரையுருவாக்கம் செய்வதை நடிகர் பாக்கிராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகரும் இயக்குனருமான சசிக்குமாரும் இப் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் பாக்கியராஜ் கூறியுள்ளார்.

சசிகுமார் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2′ படத்தில் நடித்து வருகின்றார். அவரது நடிப்பில் `அசுரவதம்’ என்ற படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More