Home இந்தியா இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும்….

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும்….

by admin

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்தியா சென்றுள்ள அவர் அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு சென்றுள்ள நிலையில் அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும் டினவும் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கு இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்துள்ள போதும் இன்னும் கூடுதல் உதவிகள் செய்யும் வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களை வைத்து இந்தியாவில் நடைபெறும் அரசியல் குறித்த கேள்விக்கு அவர், இது பெரிய விஷயமல்ல எனவும் பதிலளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More