Home இலங்கை நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை

நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் இருப்பது நல்லாட்சி அல்ல எனவும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பாலத்துறையில் நேற்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் பதவியை தனக்கு வழங்குவதில் ஜனாதிபதிக்கு விருப்பம் உள்ளது எனவும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக ஒன்றை இணைந்து பணியாற்றும் தேவை தனக்குள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி காரணமாக நாடு அழிவான நிலைமைக்கும் கேலிக்குரிய நிலைமைக்கும் மாறியுள்ளது. தான் அமைச்சராக இருந்த போது சமையல் எரிவாயு உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் தற்போதைய விலைகளை விட குறைவாக இருந்தன எனவும் முன்னாள் அமைச்சர் கருணாநாயக்க மேலும் கூறிள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More