Home உலகம் வடகொரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்ட சீனச் சுற்றுலாப் பயணிகள் பலி

வடகொரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்ட சீனச் சுற்றுலாப் பயணிகள் பலி

by admin


வடகொரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்ட சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஹவாங்காய்  வீதியில்  பாலமொன்றில் சென்று கொண்டிருந்த போது குறித்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து   விபத்தில் சிக்கியுள்ளது என தெரிய வந்துள்ளது. இதில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

வடகொரியாஆண்டு தோறும் 4.4 கோடி அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறை மூலம் வருமானமாக பெற்று வரும்நிலையில் இவ்வாறு வடகொரியாவிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டவர்களில் 80 சதவீதத்தினர் சீனாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More