Home உலகம் நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 18 பேர் பலி

நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 18 பேர் பலி

by admin


நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் தலைநகர் மகுர்டியில் உள்ள செயின்ட் இக்னேஷியஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தவேளை தேவாலயத்தினுள் துப்பாக்கியுடன் நுழைந்த பலர் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு பாதிரிகள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனதெரிவிக்கப்பட்டுள்ளது

தகவலறிந்த அங்கு சென்று காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More