Home உலகம் மாட்ரீட் பிராந்திய பொறுப்பாளர் பதவி விலகினார்

மாட்ரீட் பிராந்திய பொறுப்பாளர் பதவி விலகினார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாட்ரீட் பிராந்திய பொறுப்பாளர் கிறிஸ்டினா சிபியூன்டெஸ் ( Cristina Cifuentes   ) தனது பதவி விலகியுள்ளார் முதுமானி பட்டக் கற்கை நெறியில் மோசடி செய்துள்ளதாக ஏற்கனவே கிறிஸ்டினா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் பல்பொருள் அங்காடியொன்றில் பொருள் ஒன்றை களவாடியதாகவும் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

வயது மூப்பினை தவிர்க்கும் கிறீம் வகையொன்றை இரண்டாண்டுகளுக்கு முன்னதாக பல்பொருள் அங்காடியொன்றிலிருந்து களவாடியதாக குற்றம் சுமத்தி காணொளி வெளியிடப்பட்டுள்ளது.  அதேவேளை 2011ம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பிலேயே இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுவதாக கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

தம்மை அரசியல் ரீதியாக ஓரம் கட்டும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்வதாகத் தெரிவித்துள்ள அவர் தவறுதலாக பொருளை எடுத்து மீளவும் அதனை பாதுகாவலரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இதனை சிலர் பிழையாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கிறிஸ்டினா சிபியூன்டெஸ் பதவி விலகல் அரசாங்கத்திற்கு பாதக நிலையை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More