Home இலங்கை கொக்குவில் வாள்வெட்டுக்கும் சுவிஸ்  கணவனின் முன்னாள் மனைவிக்கும் தொடர்பா?

கொக்குவில் வாள்வெட்டுக்கும் சுவிஸ்  கணவனின் முன்னாள் மனைவிக்கும் தொடர்பா?

by admin

கொக்குவில் வாள்வெட்டுக்கும் சுவிஸ்  கணவனின் முன்னாள் மனைவிக்கும் தொடர்பா? இலக்கில் இருந்து தப்பிய இன்னாள் மனைவியின் வாக்குமூலம்..

யாழ்ப்­பா­ணம் – கொக்­கு­வில் பகு­தி­யி­லுள்ள வீடொன்­றுக்குள் புகுந்த இரு­வர் அங்­கி­ருந்த நடன ஆசி­ரி­யை­யும் அவ­ரது தாயா­ரை­யும் கத்­தி­யால் வெட்­டிக் காயப்படுத்திய பின்  தப்­பிச் சென்­ற­னர். படு­கா­ய­ம­டைந்த ஆசி­ரி­யை­யும், தாயும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில்  சேர்க்கப்பட்டனர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் 2.45 மணி­ய­ள­வில் (30.04.18) கொக்­கு­வில் மூன்றாம் கட்டடையில் (தாவ­டிக்கு அண்­மை­யில்) நடந்­துள்­ளது. மோட்­டார் சைக்­கி­ளில் சென்ற  இரு­வர் வீட்­டுக்­குள் நுழைந்து தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர்.

ஆசி­ரி­யை­யின் கூத்­தலை வெட்­டிக் அவ­ரைக் கொடூ­ர­மா­கக் கொடு­மைப்­ப­டுத்­தி­னர். அவ­ரைக் கத்தியால்  வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­ உள்ளனர்.  தாக்­கி­ய­வர்­க­ளைத் தடுக்­கச் சென்ற ஆசி­ரி­யை­யின் தாயை­யும் அவர்­கள் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். தாக்­கு­தலை நடத்­தி­விட்டு இரு­வ­ரும் தப்பிச் சென்றுள்ளனர்.

கடும் காயங்­க­ளுக்கு உள்­ளான ஆசி­ரி­யை­யும், தாயை­யும் அய­ல­வர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்­பித்­த­னர். சம்­ப­வம் தொடர்­பில் காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. காவற்துறையினர்  விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

தாக்­கு­த­லா­ளி­க­ளின் இலக்கு ஆசி­ரியை இல்லை என்­றும், அவ­ரது தங்­கையே என்­றும் காவற்துறையினர்  தெரி­வித்­த­னர். ஆசிரியையின் தங்கை சம்பவத்தின் போது வீட்­டில் இருந்­துள்­ள்ளார். அவர் சுதா­ரித்­துக்­கொண்டு ஒளிந்து கொண்­ட­தால்  தப்பித்துள்ளார். வெளிநாட்டில்  உள்ள ஒரு­வ­ருக்­கும் இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வத்­தில் தொடர்­பி­ருக்­க­லாம் என்ற சந்தேகத்தை காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சுவிஸில் உள்ள  தனது கண­வ­ரின் முதல் மனை­வியே தாக்­கு­த­லுக்­குக் கார­ணம் என ஆசிரியையின் தங்கை விசா­ர­ணை­யின்­போது தெரி­வித்­துள்­ளார். சில தினங்களுக்கு முன்­னர் அவர் தன்னைத்  தொடர்­பு­கொண்டு திரு­மண முறி­வுப் பத்­தி­ரத்­தில் கையெ­ழுத்­திட வேண்­டும் என்று அச்சுறுத்தினார். என்­றும் அது தொடர்­பில் யாழ்ப்பாணம காவல் நிலை­யத்­தில்  முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்  அவரே கூலிக்கு ஆள்­களை வைத்­துக் கொல்ல முயற்சித்திருக்கலாம் என்­றும் ஆசி­ரி­யை­யின் தங்கை விசா­ர­ணை­யில்  தெரிவித்துள்ளார்.

தாக்­கு­த­லா­ளி­கள் அந்­தப் பகு­தி­யில் உள்ள பாது­காப்­புக் கமரா ஒன்­றில் பதி­வா­கி­யுள்­ள­னர் என்­றும், நேற்று கொக்­கு­வில் பகு­தி­யில் உள்ள கடை­யொன்­றில் கத்தி வாங்கிக் கொண்டு ஆசி­ரி­யை­யின் வீட்­டுக்­குச் சென்று தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர் என்றும்,  விசாரணைகளில்  தெரி­ய­வந்­துள்­ளது.

இதேவேளை தாக்குதல்தாரிகள்  பயன்­ப­டுத்­திய மோட்­டார் சைக்­கிள் வவு­னிய மாவட்­டத்­தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்த காவற்துறையினர்,  சந்தேக நபர்கள் விரைவாக கைதுசெய்யப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்..

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More